அடுத்த 3 மணிநேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணிநேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2024-06-30 11:29 GMT

சென்னை,

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, விழுப்புரம், கடலூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்