புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

ஆங்கிலேயர் ஆட்சியில் கவுன்சில் ஹவுஸ் என்று அழைக்கப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடம், வைஸ்ராய் லார்ட் இர்வினால் கட்டப்பட்டது.

Update: 2023-05-18 16:55 GMT

புதுடெல்லி,

ஆங்கிலேயர் ஆட்சியில் கவுன்சில் ஹவுஸ் என்று அழைக்கப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடம், வைஸ்ராய் லார்ட் இர்வினால் கட்டப்பட்டது. இது, சுமார் 96 வருடங்களுக்கு முன் ஜனவரி 18-ல் திறக்கப்பட்டு இன்று வரை செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு மற்றும் கூடுதல் வசதிகளுக்காக புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு வருகிற 28-ந்தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். கடந்த 2020 டிசம்பரில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

* புதிய கட்டிடம் சுமார் 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் முக்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

* மக்களவையில் இந்தியாவின் தேசியப் பறவையான மயில் நிறத்தில் இருக்கைகள் அமைகின்றன.

* புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் 1,272 உறுப்பினர்கள் வரை அமரும் அளவில் இது விசாலமாக அமைக்கப்பட்டுள்ளது.

* மக்களவையில் 888, மாநிலங்களவையில் 384 என இருக்கைகள் அமைகின்றன

* இந்த வளாகத்தில் உள்ள அலுவலகங்கள் அதிநவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துடன் கூடியதாக வசதிகள் இடம்பெற்றுள்ளது.

* புதிய கட்டிடத்தில், மிக நவீன ஆடியோ-விஷுவல் வசதிகளுடன் கூடிய, பெரிய ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவதற்கான அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது.

புதிய பாராளுமன்ற கட்டிடம் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சென்று வர தேவையான வசதிகளுடன் அமைக்கப் பட்டுள்ளது

* 'அரசியலமைப்பு அரங்கு' எனும் பெயரில் ஓர் அரங்கு அமைகிறது. இதை சுற்றிலும் இரு அவை எம்.பி.க்களுக்காக நூலகம், நாடாளுமன்ற குழுக்களுக்கான அறைகள் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன. நாடாளுமன்றம் தொடர்புடைய விழாக்கள் இந்த அரங்கில் நடைபெறும் என கூறப்படுகிறது.

* பழைய கட்டிடம் முழுவதும் அருங்காட்சியகமாக மாற உள்ளது.

* நிலநடுக்கத்தால் பாதிக் காத அளவுக்கு வலிமையுடன் தொழில் நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

* புதிய நாடாளுமன்ற கட்டிடம், டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தால், 971 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்