4வது முறையாக மாடு மீது மோதி சேதமடைந்த வந்தே பாரத் ரெயில்!

வந்தே பாரத் விரைவு ரெயில் அரக்கோணம் சந்திப்பு அருகே கன்றுக்குட்டி மீது மோதியதில் ரெயிலின் முன்பக்கம் லேசாக சேதமானது.

Update: 2022-11-18 11:12 GMT

மைசூரு,

75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அடுத்த ஆண்டிற்குள் 75வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படும் என்று மத்தியஅரசு அறிவித்தது. அதன்படி ஒவ்வொரு பகுதிக்கும் வந்தே பாரத் ரெயில் சேவையையும் அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்தநிலையில், முதற்கட்டமாக கடந்த அக்டோபர் 6ஆம் தேதி குஜராத் – மராட்டிய இடையே இயக்கப்பட்ட ரெயிலில் எருமை மாடுகள் மோதியதில் 4மாடுகள் உயிரிழந்தன. ரெயிலின் கூம்பு வடிவ முகப்புப் பகுதியில் சேதம் ஏற்பட்டது.

தொடர்ந்து அக்டோபர் 7ஆம் தேதி அதே ரெயிலில் பசுமாடு ஒன்று மோதியதில் ரெயிலின் முன்பகுதி சேதமடைந்தது. பசுமாடு மோதி ரெயில் சேதமடைந்ததால் பசுமாட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து அக்டோபர் 8ஆம் தேதி காலை 6 மணிக்கு டெல்லியிலிருந்து வாரணாசிக்கு இயக்கப்பட்ட வந்தே பாரத் ரெயிலின் சக்கரம் திடீரென 'ஜாம்' ஆனது. இதனால் பயணிகள் 5மணி நேரம் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்ல முடியாமல் தவித்தனர்.

கடந்த மாதம் 29- ம்தேதி மும்பை – காந்திநகர் (குஜராத்) வரை இயக்கப்படும் வந்தே பாரத் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. காலை 8.15மணியளவில் அதுல் ரெயில்வே நிலையம் அருகே ஏற்பட்ட இந்த விபத்தில் ஒரு பசுமாடு ஒன்று காயமடைந்துள்ளதாகத் இந்திய ரெயில்வே தெரிவித்தது. உடனடியாக அதிகாரிகள் வந்து சேதமடைந்த பகுதியை சரிசெய்தனர். இதனால் ரெயில் மீண்டும் புறப்பட்டுச் செல்வதற்கு 15நிமிடம் காலதாமதம் ஏற்பட்டது.

இந்தநிலையில், நேற்று இரவு மைசூரில் இருந்து சென்னை நோக்கி வந்த வந்தே பாரத் விரைவு ரெயில் அரக்கோணம் சந்திப்பு அருகே கன்றுக்குட்டி மீது மோதியதில் ரெயிலின் முன்பக்கம் லேசாக சேதமானது. ரெயிலில் அடிப்பட்டு கிடந்த கன்றுக்குட்டியை ஊழியர்கள் அகற்றினர். சிறிது நேரம் நிறுத்தப்பட்ட ரெயில், மீண்டும் சென்னை நோக்கி இயக்கப்பட்டது.

சென்னை – மைசூர் வரை இயங்கும் 5வது வந்தே பாரத் ரெயிலை பிரதமர் நவம்பர் 11ஆம் தேதிபிரதமர் மோடி துவங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்