சமூகவலைத்தள பழக்கம் விபரீதமானது: கேரள கன்னியாஸ்திரி மடத்தில் 3 மாணவிகள் பலாத்காரம்

சமூகவலைத்தள பழக்கத்தால் கேரள கன்னியாஸ்திரி மடத்தில் 3 மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

Update: 2022-08-26 23:28 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஒரு கன்னியாஸ்திரி மடம் உள்ளது. இங்குள்ள விடுதியில் கன்னியாஸ்திரிகளும், சில மாணவிகளும் தங்கி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கன்னியாஸ்திரி மடத்திற்குள்ளே இருந்து 3 பேர் சுவர் ஏறி வெளியே குதித்தனர். இதனை கவனித்த போலீசார் 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது, 3 பேரும் அங்கு தங்கி படிக்கும் 3 மாணவிகளை பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். சமூக வலைத்தளம் மூலம் 3 பேருக்கும், மாணவிகளுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கத்தை பயன்படுத்தி மாணவிகளிடம் அவர்கள் ஆசைவார்த்தைகளை கூறியுள்ளனர். அப்போது இரவு நேரத்தில் மடத்திற்குள் புகுந்த அவர்கள் மாணவிகளுக்கு மதுவாங்கி கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் சில நாட்களாக நடந்துள்ளது. 3 பேரும் திருவனந்தபுரத்தை பகுதியைச் சேர்ந்த 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் ஆவர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். பலாத்காரம் செய்யப்பட்ட 3 மாணவிகளும் 18 வயதிற்கு குறைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்