சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிப்பு

பத்ராசால் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-19 09:42 GMT

மும்பை,

பத்ராசால் குடிசை சீரமைப்பு மோசடியில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் கடந்த மாதம் 1-ந் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

பத்ரா சால் மோசடியில் கிடைத்த சட்டவிரோத பணத்தின் ஒரு பகுதி சஞ்சய் ராவத்தின் மனைவி, கூட்டாளிகளுக்கும் வழங்கப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது. மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் சஞ்சய் ராவத் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிந்த நிலையில் அவர் மும்பையில் உள்ள சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். சிறப்பு கோர்ட்டு சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவலை மேலும் 14 (வருகிற அக்டோபர் 3-ந் தேதி வரை) நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்