மாலத்தீவு அதிபர் இந்தியா வருகை: ஜனாதிபதி, பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்பு
மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகம்மது சாலிக் ஜனாதிபதி, பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசுகிறார்.
புதுடெல்லி,
மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகம்மது சாலிக் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். தலைநகர் டெல்லியில் மத்திய மீன்வளத்துறை மந்திரி சஞ்சீவ் பல்யாண் வரவேற்றார்.
தொழில்முறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர், இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திரமோடி ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.
நாளை (புதன்கிழமை) மும்பை செல்லும் அவர், அங்கு தொழில் முனைவோர்களை சந்தித்து பேசுகிறார்.