ஜம்மு காஷ்மீரில் ரிக்டர் 3.5 அளவில் லேசான நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மீரில் ரிக்டர் 3.5 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2024-05-18 10:13 GMT

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் இன்று காலை 8.35 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்