'பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா இதுவரை இல்லாத அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது' - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா இதுவரை இல்லாத அளவிற்கு அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-05 16:24 GMT

புதுடெல்லி,

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"பிரதமர் மோடியின் தலைமையில் 'மேக் இன் இந்தியா' திட்டம் ஒவ்வொரு ஆண்டும் புதிய இலக்குகளை அடைந்து வருகிறது. 2023-24ம் நிதியாண்டில் பாதுகாப்பு உற்பத்தி மதிப்பில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2023-24ல் இந்தியாவின் உற்பத்தி மதிப்பு ரூ.1,26,887 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் உற்பத்தி மதிப்பை விட 16.8% அதிகமாகும்.

பாதுகாப்பு பொருட்களைத் தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில்துறை நிறுவனங்களை வாழ்த்துகிறேன். உலகளாவிய பாதுகாப்பு உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவதற்கு உகந்த ஆட்சியை உருவாக்க அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது."

இவ்வாறு ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்