அசாமில் கடும் வெள்ளப்பெருக்கு; 4.88 லட்சம் மக்கள் பாதிப்பு

அசாமில் ஏற்பட்டு உள்ள கடும் வெள்ளப்பெருக்கால் 4.88 லட்சம் மக்கள் பாதிப்படைந்து உள்ளனர்.

Update: 2023-06-24 09:36 GMT

கவுகாத்தி,

அசாமில் பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு பாதிப்பு மேலும் கடுமை அடைந்துள்ளது. தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது. இதனால் மேலும் பல புதிய பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.

அசாமில் பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நெமதிகாட் (ஜோர்ஹாத்) பகுதியில் அபாய அளவை கடந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது என மத்திய நீர் ஆணையம் தெரிவித்து உள்ளது. பக்லாடியா ஆற்றில் அபாய அளவை கடந்து வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் வெள்ளநீரானது புதிய பகுதிகளிலும் புகுந்து உள்ளது.

அசாம் வெள்ளப்பெருக்கால் 16 மாவட்டங்களை சேர்ந்த 4.88 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. அசாமில் வெவ்வேறு பகுதிகளில் அதிக மழை பொழிவும் மற்றும் இடி, மின்னலும் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. அசாம் வானிலை ஆய்வு மையம் இன்று மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்து உள்ளது.

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் 1 லட்சத்திற்கும் கூடுதலான கால்நடை வளர்ப்பு பிராணிகள் மற்றும் கோழி பண்ணைகள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்