கொரோனா பரவல் அதிகரிப்பு: தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு எச்சரிக்கை

கொரோனா பரவல் அதிகரிப்பால், தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-03 20:01 GMT

Image Courtacy: PTI

புதுடெல்லி,

தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, மராட்டியம், மற்றும் கர்நாடகம் ஆகிய 5 மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் சற்றே அதிகரித்து வருகிறது. இங்கு உள்ளூர் தொற்று பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு நம்புகிறது.

எனவே 5 மாநிலங்களுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையொட்டி மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், 5 மாநிலங்களுக்கும் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர், "கொரோனா தொற்றில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை இழந்து விடக்கூடாது. எனவே பொது சுகாதார பதிலளிப்புகளில் இடர் மதிப்பீடு அடிப்படையிலான அணுகுமுறைகளை பின்பற்ற வேண்டிய தேவை உள்ளது. மாநிலங்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தொற்று பரவலை தடுக்க தேவைப்பட்டால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்