நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 23ஆம் தேதி இடைத்தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 23ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Update: 2022-05-25 17:19 GMT

புதுடெல்லி,

பஞ்சாப், உத்தரப் பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 23ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன்படி 3 மக்களவைத் தொகுதிகள், 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 23ல் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், ஜூன் 26ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்