ஜார்கண்டில் பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி, பலர் படுகாயம்

ஜார்கண்ட் மாநிலத்தில் பஸ் ஒன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.

Update: 2022-09-17 16:07 GMT

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் இன்று சுமார் 50 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.

கிரிதி மாவட்டத்தில் இருந்து ராஞ்சி நோக்கிச் சென்ற பேருந்து, தடிஜாரியா காவல் நிலையப் பகுதியில் உள்ள சிவன்னே ஆற்றில் உள்ள பாலத்தின் தடுப்பு பகுதியை உடைத்துக் கொண்டு கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரண்டு பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் ஹசாரிபாக்கில் உள்ள சதார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

மேலும் சிலர் பலத்த காயம் அடைந்துள்ளதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களை சிறந்த சிகிச்சைக்காக ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (RIMS) அனுப்ப தயாராகி வருகின்றனர். இன்னும் சில பயணிகள் பேருந்தில் சிக்கியிருப்பதால் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்