புதிதாக 106 பேருக்கு கொரோனா: சத்தீஷ்காரில் ஒருவர் பலி

நாட்டில் நேற்று புதிதாக 106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

Update: 2023-06-15 19:59 GMT

புதுடெல்லி,

நாட்டில் நேற்று முன்தினம் 120 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை குறைந்தது. புதிதாக 106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 93 ஆயிரத்து 186 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று தொற்று பாதிப்பில் இருந்து 186 பேர் குணம் அடைந்தனர். இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 59 ஆயிரத்து 226 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்திருக்கிறார்கள்.

தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 81 குறைந்துள்ளது. இதனால் தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று காலை 8 மணி நிலவரப்படி 2,067 ஆகக் குறைந்தது

தொற்றினால் நேற்று முன்தினம் ஒருவர் கூட பலியாகவில்லை. நேற்று சத்தீஷ்காரில் மட்டும் ஒருவர் பலியானார். இதனால் தொற்றால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 893 ஆக உயர்ந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்