விம்பிள்டன் டென்னிஸ்: நம்பர் 1 வீரர் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

image courtesy:AFP
சின்னர் தனது 2-வது சுற்று ஆட்டத்தில் மேட்டியோ பெரெட்டினி உடன் மோத உள்ளார்.
லண்டன்,
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நேற்று தொடங்கியது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் உலகின் நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி), யானிக் ஹான்ப்மேன் (ஜெர்மனி) உடன் மோதினார்.
இதில் முதல் 2 செட்டுகளை கைப்பற்றிய சின்னர் எளிதில் வெற்றி பெறுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் 3-வது செட்டை யானிக் ஹான்ப்மேன் கைப்பற்றி அதிர்ச்சி அளித்தார். இதனையடுத்து 4-வது செட்டை சின்னர் கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த ஆட்டத்தில் சின்னர் 6-3, 6-4, 3-6 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இவர் தனது 2-வது சுற்று ஆட்டத்தில் சக நாட்டவரான மேட்டியோ பெரெட்டினி உடன் மோத உள்ளார்.
Related Tags :
Next Story