ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்திற்கு ரெயில்வேயில் பதவி உயர்வு


ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்திற்கு ரெயில்வேயில் பதவி உயர்வு
x

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்திற்கு வடக்கு ரெயில்வேயில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது

புதுடெல்லி,

33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. இந்த தொடரில் ஆண்களுக்கான மல்யுத்தம் (ஆண்கள் 57 கிலோ எடைபிரிவு பிரீஸ்டைல்) வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் அமன் ஷெராவத் வெண்கலப்பத்தக்கத்தை கைப்பற்றி அசத்தினார்.

இந்த நிலையில், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்திற்கு வடக்கு ரெயில்வேயில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. வடக்கு ரெயில்வே தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அமன் ஷெராவத்தின் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் அமன் ஷெராவத்திற்கு பதவி உயர்வு வழங்கி அறிவிக்கப்பட்டது.


Next Story