உலக பேட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் பிரனாய் காலிறுதியில் தோல்வி

image courtesy: BAI Media twitter


27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
டோக்கியோ,
27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் சீன வீரர் ஜாவோ ஜுன்பெங்குடன் மோதினார்.
இந்த போட்டியில் ஜாவோ ஜுன்பெங் 19-21, 21-6, 21-18 என்ற செட் கணக்கில் பிரனாயை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதையடுத்து அரையிறுதி போட்டிக்கு ஜாவோ முன்னேறியுள்ளார். நாளை நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் ஜாவோ, தாய்லாந்து வீரர் குன்லவுட் விடிசார்ன் உடன் மோத உள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire