ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: 2-வது சுற்றுக்கு முன்னேறினார் பிரனாய்

Image Courtesy : BAI Media Twitter
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் தொடங்கியது.
சிட்னி,
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் எச். எஸ். பிரனாய் 21-10, 23-21 என்ற நேர் செட் கணக்கில் பிரேசில் வீரர் யகோர் கோயல்ஹொவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிரண் ஜார்ஜ், சமீர் வர்மா ஆகிய இந்தியர்களும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர். தமிழக வீரர் சங்கர் முத்துசாமி 16-21, 21-18, 10-21 என்ற செட் கணக்கில் மலேசியாவின் லீ ஸியா ஜியாவிடம் போராடி வீழ்ந்தார்.
Related Tags :
Next Story