உலகக்கோப்பையில் தங்க கையுறை வென்ற அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மேற்குவங்காளம் வருகை...!


உலகக்கோப்பையில் தங்க கையுறை வென்ற அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மேற்குவங்காளம் வருகை...!
x

கால்பந்து உலகக்கோப்பை கோப்பையை அர்ஜெண்டினா கைப்பற்றியது.

கொல்கத்தா,

கடந்த ஆண்டு பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டி நடைபெற்றது. இதில் மெஸ்சி தலைமையிலான அர்ஜெண்டினா அணி அபார வெற்றிபெற்று உலகக்கோப்பையை வென்றது.

இப்போட்டியில் சிறப்பாக ஆடிய அர்ஜெண்டினா அணியின் கோல்கீப்பர் எமிலினோ மெர்டினிஸ் உலகக்கோப்பை கால்பந்து தங்க கையுறை வென்றார்.

இந்நிலையில், அர்ஜெண்டினா கோல்கீப்பர் எமிலினோ மெர்டினிஸ் இன்று மேற்குவங்காள மாநிலம் வந்துள்ளார். வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெர்டினிஸ் இன்று விமானம் மூலம் மேற்குவங்காள தலைநகர் கொல்கத்தா வந்தார்.

மெர்டினிஸ் 3 நாட்கள் மேற்குவங்காளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அவர் மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story