பெண்கள் டி20 உலகக்கோப்பை; நாடு திரும்பும் பாகிஸ்தான் கேப்டன் - காரணம் என்ன..?


பெண்கள் டி20 உலகக்கோப்பை; நாடு திரும்பும் பாகிஸ்தான் கேப்டன் - காரணம் என்ன..?
x

Image Courtesy: @T20WorldCup

9-வது பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.

துபாய்,

9-வது பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.'ஏ' பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறும், அதேவேளையில் இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வி கண்டால் தொடரில் இருந்து வெளியேற வாய்ப்புகள் அதிகமாகும்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா ஆட மாட்டார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நேற்று காலை பாத்திமாவின் தந்தை இறந்ததை அடுத்து, அவர் நாடு திரும்ப உள்ளார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

எனவே, வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்றும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் துணை கேப்டன் முனீபா அலி தலைமையில் பாகிஸ்தான் அணி விளையாட இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story