பெண்கள் டி20 உலகக் கோப்பை: வங்காளதேச அணிக்கு 119 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து


பெண்கள் டி20 உலகக் கோப்பை: வங்காளதேச அணிக்கு 119 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து
x

இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்தது.

ஷார்ஜா,

9-வது பெண்கள் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்டுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏ பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து - வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்ட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹீதர் நைட் பேட்டிங்கை தேர்வு செய்தார் . அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது .

தொடக்கம் முதல் வங்காளதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி தடுமாறியது. அந்த அணியில் டேனியல் வாட் மட்டும் சிறப்பாக விளையாடி 41ரன்கள் குவித்தார் . இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து வங்காளதேச அணி 119 ரன்கள் இலக்குடன் விளையாடி வருகிறது .


Next Story