மகளிர் ஆசிய கோப்பை: மலேசிய அணியை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி


மகளிர் ஆசிய கோப்பை:   மலேசிய அணியை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி
x

Image : AsianCricketCouncil

வங்காளதேசம் 114 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கொழும்பு,

9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேசம் - மலேசியா அணிகள் மோதின . இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி களமிறங்கிய வங்காளதேசம் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 191 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக முர்ஷிதா 80 ரன்னும் சுல்தானா 62 ரன்களும் விளாசினர். மலேசியா தரப்பில் மஹிரா இஸ்ஸாதி இஸ்மாயில், எல்சா ஹண்டர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதனையடுத்து , மலேசிய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஐன்னா ஹமிசா ஹாஷிம்- வான் ஜூலியா ஆகியோர் களமிறங்கினர். ஆட்டத்தில் 2-வது பந்திலேயே ஐன்னா ஹமிசா 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த எல்சா ஹண்டர் 20 ரன்னிலும் வான் ஜூலியா 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.இதனை தொடர்ந்து வந்த வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் வங்காளதேசம் அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் பி பிரிவில் முதல் அணியாக மலேசியா வெளியேறியது.


Next Story