டி.என்.பி.எல்: சேப்பாக் அணிக்கு எதிராக டாஸ் வென்ற திருப்பூர் பந்துவீச்சு தேர்வு


டி.என்.பி.எல்: சேப்பாக் அணிக்கு எதிராக டாஸ் வென்ற திருப்பூர் பந்துவீச்சு தேர்வு
x

சேப்பாக் அணிக்கு எதிராக டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

சேலம்,

8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரில் இதுவரை 7 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன.

இந்நிலையில் இந்த தொடரில் சேலத்தில் இன்று நடைபெறும் 8வது லீக் ஆட்டத்தில் பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், விஜய் சங்கர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து சேப்பாக் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story