டி.என்.பி.எல்: டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சு தேர்வு


டி.என்.பி.எல்: டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சு தேர்வு
x

Image Courtacy: @DindigulDragons

திருப்பூர் - திண்டுக்கல் இடையிலான ஆட்டம் மழை காரணமாக 13 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

கோவை,

8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக்(டி.என்.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் 9 லீக் ஆட்டங்கள் கடந்த 11ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தற்போது 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் கோவையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் 7.15 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் அப்போது மழை பெய்ததன் காரணமாக டாஸ் கூட போடாமல் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அங்கு மழை நின்றதை அடுத்து ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இந்த ஆட்டம் மழை காரணமாக 13 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story