சென்னை-பஞ்சாப் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 27-ம் தேதி தொடங்குகிறது..!


சென்னை-பஞ்சாப் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 27-ம் தேதி தொடங்குகிறது..!
x

சென்னை-பஞ்சாப் அணிகள் மோதும் ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 27-ம் தேதி தொடங்குகிறது.

சென்னை,

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மொத்தம் 7 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.

இதில் கடந்த 3-ந் தேதி நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ரன் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை வீழ்த்தியது. கடந்த 12-ந் தேதி நடந்த 2-வது போட்டியில் சி.எஸ்.கே. அணி 3 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சிடம் தோற்றது. இதையடுத்து கடந்த 21-ம் தேதி நடந்த கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 30-ம் தேதி நடைபெறவிருக்கும் சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தின் டிக்கெட் விற்பனை வரும் ஏப்ரல் 27ம் தேதி (வியாழக்கிழமை) காலை 9:30 மணிக்கு தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகள் ஆன்லைன் மற்றும் கவுண்டர்களில் வழங்கப்படும் என தெரிவிகப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.







Next Story