ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்...ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்கும் இந்திய அணி...!


ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்...ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்கும் இந்திய அணி...!
x

image courtesy; AFP

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது

புதுடெல்லி,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 11ம் தேதி தொடங்க உள்ளது. முதல் ஆட்டம் வரும் 11ம் தேதி மொகாலியிலும், 2வது ஆட்டம் வரும் 14ம் தேதி இந்தூரிலும், 3வது ஆட்டம் வரும் 17ம் தேதி பெங்களூருவிலும் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ரோகித் மற்றும் கோலிக்கு இடம் கிடைக்குமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் ரோகித் மற்றும் கோலி இருவரும் அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்த அணிக்கு ரோகித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார்.



Next Story