ஐ.பி.எல்.: ஷிகர் தவான் அதிரடி... பெங்களூரு அணிக்கு வலுவான இலக்கு நிர்ணயித்த பஞ்சாப்


ஐ.பி.எல்.: ஷிகர் தவான் அதிரடி... பெங்களூரு அணிக்கு வலுவான இலக்கு நிர்ணயித்த பஞ்சாப்
x

image courtesy: AFP

தினத்தந்தி 25 March 2024 9:17 PM IST (Updated: 25 March 2024 9:40 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப் தரப்பில் அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் 45 ரன்கள் அடித்தார்.

பெங்களூரு,

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 6-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் களமிறங்கினர். இதில் பேர்ஸ்டோ 8 ரன்களில் முகமது சிராஜ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்த பிரப்சிம்ரன் சிங் 17 பந்துகளில் 25 ரன்கள் அடித்த நிலையில் மேக்ஸ்வெல் சுழலில் சிக்கினார். பின்னர் களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டன் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அவர் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். லிவிங்ஸ்டன் ஆட்டமிழந்த அடுத்த பந்திலேயே ஷிகர் தவானும் 45 ரன்கள் அடித்த நிலையில் அவுட்டானார்.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஜித்தேஷ் சர்மா - சாம் கர்ரண் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர். இதில் சாம் கர்ரண் 23 ரன்களிலும், ஜித்தேஷ் சர்மா 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

கடைசி கட்டத்தில் சஷாங் சிங் அதிரடியாக விளையாடினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் அடித்துள்ளது. சஷாங் சிங் 8 பந்துகளில் 21 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதன் மூலம் பெங்களூரு அணிக்கு 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற வலுவான இலக்கை பஞ்சாப் நிர்ணயித்துள்ளது.

பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 45 ரன்கள் அடித்தார். பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினர்.

இதனையடுத்து இலக்கை நோக்கி பெங்களூரு அணி விளையாட உள்ளது.

1 More update

Next Story