ஐ.பி.எல்.2025: கொல்கத்தா அணியின் கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்..? வெளியான தகவல்


ஐ.பி.எல்.2025: கொல்கத்தா அணியின் கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்..? வெளியான தகவல்
x

image courtesy: AFP

அடுத்த ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது.

மும்பை,

அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஏற்கனவே கொல்கத்தா அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இருந்த கவுதம் கம்பீர், அபிஷேக் நாயர், ரியான் டென் டஸ்காட்டே உள்ளிட்டோர் இந்திய அணிக்கு சென்றுள்ளனர்.

அதேபோல் குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவும் அதிலிருந்து வெளியேற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டது என இப்போதே அடுத்த சீசன் விறுவிறுப்பை எகிற வைத்துள்ளது.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய டி20 அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ் கொல்கத்தா அணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொல்கத்தா அணியில் அவர் இணையும் பட்சத்தில் அந்த அணியின் கேப்டன் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story