91 ஆண்டுகளில் முதல் முறை.. வரலாறு படைத்த நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் டெஸ்ட்


91 ஆண்டுகளில் முதல் முறை.. வரலாறு படைத்த நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் டெஸ்ட்
x

நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

கிரேட்டர் நொய்டா,

நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கடந்த 9-ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் ஒரு பந்து கூட வீசப்படாமல் முதல் நாள் ஆட்டம் ரத்தானது. மைதானத்தில் வடிகால் வசதி சரியாக இல்லாததால் தேங்கிய தண்ணீரை சீக்கிரம் வெளியேற்ற முடியவில்லை.

இதனையடுத்து 2-வது மற்றும் 3-வது நாள் ஆட்டமும் தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலையில் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் மைதான ஊழியர்கள் போராடி 3-வது நாளான நேற்று தண்ணீரை வெளியேற்றினர்.

ஆனால் மீண்டும் கிரேட்டர் நொய்டாவில் மழை பெய்ததன் காரணமாக இந்த போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் 91 வருடங்களில் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஒரு டெஸ்ட் போட்டி கைவிடப்படுவது இதுவே முதல் முறையாகும். கடந்த 1933 முதல் இதற்கு முன் இந்தியாவில் நடைபெற்ற எந்த டெஸ்ட் போட்டியும் இப்படி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டதில்லை. இந்த போட்டி ரத்தான நிலையில், இந்திய வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.


Next Story