பார்டர்-கவாஸ்கர் டிராபி; வெல்லப்போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? - சுனில் கவாஸ்கர் கணிப்பு


Border-Gavaskar Trophy; Will India win? Australia? - Sunil Gavaskar prediction
x

image courtesy; AFP

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.

காலம் காலமாக ஆஸ்திரேலியாவில் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்தியா 2018/19-ம் ஆண்டு முதல் முறையாக விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது. அதே போல 2020/21 தொடரில் ரகானே தலைமையில் இந்தியா 2 - 1 என்ற கணக்கில் மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பையை (பார்டர்-கவாஸ்கர் டிராபி) வென்றது.

ஆஸ்திரேலியாவில் வைத்து அந்த அணியை தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரில் இந்தியா வீழ்த்துமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். இருப்பினும் கடந்த 2 தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இம்முறை பார்டர்-கவாஸ்கர் டிராபியை ஆஸ்திரேலியா வெல்லும் என்று ரிக்கி பாண்டிங் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றும் என இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இரு அணியிலும் அபார திறமை கொண்ட வீரர்கள் இருப்பதால் இது ஒரு அற்புதமான தொடராக இருக்கும் என நினைக்கிறேன்.

மேலும், கிரிக்கெட் விளையாட்டில் டெஸ்ட் வடிவம் ஏன்? அனைவரும் விரும்பக்கூடியதாக உள்ளது என்பதை இந்த தொடர் காட்டும். எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story