முள்ளாட்சி மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா


முள்ளாட்சி மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா
x

திருத்துறைப்பூண்டி முள்ளாட்சி மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா நடந்தது.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி;

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான முள்ளாட்சி மாரியம்மன் கோவில் 79- ம் ஆண்டு பங்குனி திருவிழா நடந்தது. விழாவையொட்டி சுவாமி வீதி உலா, தீமிதி திருவிழா, தெப்ப உற்சவம் நடைபெறும். நேற்று விஸ்வகர்மா சமூகத்தாரின் மண்டகப்படியை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் தீபாராதனையும் நடைபெற்றது. பின்பு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி நகர் முழுவதும் வீதி உலா நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில செயல் அலுவலர் முருகையன், மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


1 More update

Next Story