ஈரோடு கபாலீஸ்வரர் வகையறா கோவில் உண்டியலில் பக்தர்கள் ரூ.8½ லட்சம் காணிக்கை


ஈரோடு கபாலீஸ்வரர் வகையறா கோவில்  உண்டியலில் பக்தர்கள் ரூ.8½ லட்சம் காணிக்கை
x

ஈரோடு கபாலீஸ்வரர் வகையறா கோவில் உண்டியலில் பக்தர்கள் ரூ.8½ லட்சம் காணிக்கை செலுத்தப்பட்டது.

ஈரோடு

ஈரோடு கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஆருத்ரா கபாலீஸ்வரர் (ஈஸ்வரர்) கோவில் உள்ளது. இந்த கோவிலின் வகையறா கோவில்களாக கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோவில், திருவேங்கடசாமி வீதியில் உள்ள மகிமாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த 3 கோவில்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் மொத்தம் 18 உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் நேற்று பவானி சங்கமேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சாமிநாதன், ஈரோடு சரக ஆய்வாளர் தினேஷ் ஆகியோர் முன்னிலையில் 18 உண்டியல்களும் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது. இதில் 3 கோவில்களின் உண்டியல்களிலும் மொத்தம் ரூ.8 லட்சத்து 49 ஆயிரத்து 651 மற்றும் 10½ கிராம் தங்கம், 511 கிராம் வெள்ளியையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் கோசாலையில் வைக்கப்பட்டு உள்ள உண்டியலில் 40 ஆயிரத்து 564 ரூபாய் இருந்தது. காணிக்கை எண்ணும் பணியில் பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

1 More update

Next Story