ஈரோடு கோட்டைஈஸ்வரன் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா


ஈரோடு கோட்டைஈஸ்வரன் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா
x

ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது.

ஈரோடு

ஈரோடு கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஆருத்ர கபாலீஸ்வரர் (ஈஸ்வரன்) கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்படுகிறது. இதில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா கடந்த மாதம் 28-ந்தேதி வழிபாட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. நேற்று அதிகாலையில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் தொடங்கியது. இதில் பால், சந்தனம், குங்குமம், இளநீர் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 63 நாயன்மார்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் வீதி உலா நடைபெற்றது. ஈஸ்வரன் கோவில் முன்பு தொடங்கிய ஊர்வலம் மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பூங்கா, காமராஜர் வீதி வழியாக மீண்டும் கோவிலில் நிறைவடைந்தது. மாலையில் நடராஜரின் ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story