மவுனம் ஆன்மா முன்னேற்றம்
பயிற்சி செய்யாமல் இருப்பது தியானத்திற்குத் தீங்கு. சுத்தம் இல்லாதிருப்பது உடம்பிற்குத் தீங்கு. சோம்பல் என்பது புலன்களுக்குத் தீங்கு.
மவுனம்
பயிற்சி செய்யாமல் இருப்பது தியானத்திற்குத் தீங்கு. சுத்தம் இல்லாதிருப்பது உடம்பிற்குத் தீங்கு. சோம்பல் என்பது புலன்களுக்குத் தீங்கு. சஞ்சலம் மனதிற்குத் தீங்கு. யாருடைய மனம் ஆசைகளை துறந்து விட்டு, தூய்மையைப் பெற்றுள்ளதோ, அந்த விழிப்புற்ற மனிதனிடம் பயம் என்பது இல்லை.
–புத்தர்.
ஆன்மா
எப்பொழுதும் முக்தனான எனக்குச் செயல் எதுவும் இல்லை. ஆன்மா தூய அறிவு, ஒளி வடிவானது. அதனிடம் அஞ்ஞான இருள் இல்லை. ஆன்மாவையே எப்பொழுதும் தியானம் செய்பவனுக்குக் காலம் முதலியவற்றால் ஆக வேண்டியது எதுவும் இல்லை. ஏனெனில் ஆன்மாவிற்கு, காலம், தேசம் முதலியவற்றுடன் எந்தத் தொடர்பும் இல்லை.
–ஆதிசங்கரர்.
முன்னேற்றம்
மந்திர தீட்சை மட்டும் போதாது. மனதையும், சுய முயற்சியையும் பொறுத்து தான் முன்னேற்றம் கிடைக்கும். கோமாளிக் கூத்தை கைவிட்டு விட்டு, கடவுளை நோக்கிச் செல். உனக்குள் ஏற்படும் ஆன்மிக எண்ணங்களையும், உணர்ச்சிகளையும், மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிராமல் உன்னுள் இருத்திக்கொள்வது நல்லது.
–ராமகிருஷ்ணர்.
பயிற்சி செய்யாமல் இருப்பது தியானத்திற்குத் தீங்கு. சுத்தம் இல்லாதிருப்பது உடம்பிற்குத் தீங்கு. சோம்பல் என்பது புலன்களுக்குத் தீங்கு. சஞ்சலம் மனதிற்குத் தீங்கு. யாருடைய மனம் ஆசைகளை துறந்து விட்டு, தூய்மையைப் பெற்றுள்ளதோ, அந்த விழிப்புற்ற மனிதனிடம் பயம் என்பது இல்லை.
–புத்தர்.
ஆன்மா
எப்பொழுதும் முக்தனான எனக்குச் செயல் எதுவும் இல்லை. ஆன்மா தூய அறிவு, ஒளி வடிவானது. அதனிடம் அஞ்ஞான இருள் இல்லை. ஆன்மாவையே எப்பொழுதும் தியானம் செய்பவனுக்குக் காலம் முதலியவற்றால் ஆக வேண்டியது எதுவும் இல்லை. ஏனெனில் ஆன்மாவிற்கு, காலம், தேசம் முதலியவற்றுடன் எந்தத் தொடர்பும் இல்லை.
–ஆதிசங்கரர்.
முன்னேற்றம்
மந்திர தீட்சை மட்டும் போதாது. மனதையும், சுய முயற்சியையும் பொறுத்து தான் முன்னேற்றம் கிடைக்கும். கோமாளிக் கூத்தை கைவிட்டு விட்டு, கடவுளை நோக்கிச் செல். உனக்குள் ஏற்படும் ஆன்மிக எண்ணங்களையும், உணர்ச்சிகளையும், மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிராமல் உன்னுள் இருத்திக்கொள்வது நல்லது.
–ராமகிருஷ்ணர்.
Next Story