12. திருப்பாவை - திருவெம்பாவை
திருப்பாவை கனைத்து இளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலை வழியே நின்று பால்சோர நனைத்து இல்லம் சேறு ஆக்கும்நற் செல்வன் தங்காய்! பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றி சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானைப் பாடவும்
திருப்பாவை
கனைத்து இளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால்சோர
நனைத்து இல்லம் சேறு ஆக்கும்நற் செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றி
சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதுஎன்ன பேருறக்கம்!
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.
பசியால் கதறித்திரியும் தங்கள் கன்றுகளை எண்ணி இரக்கப்பட்டு, எருமைகள் தங்கள் மடியில் பாலைச் சொரிகின்றன. அதனால் வீடு ஈரமாகி சேற்று வெள்ளமாய்க் காட்சியளிக்கிறது. அத்தகு செல்வ வளம் வாய்ந்தவனின் தங்கையே! மார்கழி மாத பனி எங்கள் தலையின் மீது படர உன் வீட்டு தலைவாசலில் தென்திசை வேந்தன் ராவணனை அழித்த ராமன் புகழைப் பாடி நிற்கிறோம். நீயோ வாய் திறந்து பேசாதிருக்கிறாய். எல்லா வீட்டினரும் துயிலெழுந்த பின்னும் நீ இப்படி பேருறக்கம் கொள்ளலாமா? இனியாவது எழுந்து வா, நீராடி வழிபடுவோம்.
திருவெம்பாவை
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நல் தில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டு ஆர்ப்ப
பூத்திகமழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இரும் சுனைநீர் ஆடுஏலோர் எம்பாவாய்.
நம்மைப் பிணித்திருக்கும் பிறவித் துன்பம் நீங்க தில்லைச்சிற்றம்பலத்தில் ஆனந்தக்களிப்பில் நெருப்பை கையில் ஏந்தி ஆடுகின் றான் இறைவன். உலகங்கள் அனைத்தையும் காத்தும், படைத் தும், அழித்தும் அவனே திரு விளையாடல் நடத்துகிறான். அத்தகைய பெருமைமிக்க அவன் புகழைப் பாடி, வளையல்கள் ஒலிக்க, நீண்ட மேகலைகள் ஆரவாரிக்க, அழகிய கூந்தலின் மீது வண்டுகள் இசைபாட, பூக்கள் நிறைந்த பொய்கையில் நீராடி இறைவனின் பொற்பாதங்களைப் போற்றுவோம்.
கனைத்து இளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால்சோர
நனைத்து இல்லம் சேறு ஆக்கும்நற் செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றி
சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதுஎன்ன பேருறக்கம்!
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.
பசியால் கதறித்திரியும் தங்கள் கன்றுகளை எண்ணி இரக்கப்பட்டு, எருமைகள் தங்கள் மடியில் பாலைச் சொரிகின்றன. அதனால் வீடு ஈரமாகி சேற்று வெள்ளமாய்க் காட்சியளிக்கிறது. அத்தகு செல்வ வளம் வாய்ந்தவனின் தங்கையே! மார்கழி மாத பனி எங்கள் தலையின் மீது படர உன் வீட்டு தலைவாசலில் தென்திசை வேந்தன் ராவணனை அழித்த ராமன் புகழைப் பாடி நிற்கிறோம். நீயோ வாய் திறந்து பேசாதிருக்கிறாய். எல்லா வீட்டினரும் துயிலெழுந்த பின்னும் நீ இப்படி பேருறக்கம் கொள்ளலாமா? இனியாவது எழுந்து வா, நீராடி வழிபடுவோம்.
திருவெம்பாவை
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நல் தில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டு ஆர்ப்ப
பூத்திகமழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இரும் சுனைநீர் ஆடுஏலோர் எம்பாவாய்.
நம்மைப் பிணித்திருக்கும் பிறவித் துன்பம் நீங்க தில்லைச்சிற்றம்பலத்தில் ஆனந்தக்களிப்பில் நெருப்பை கையில் ஏந்தி ஆடுகின் றான் இறைவன். உலகங்கள் அனைத்தையும் காத்தும், படைத் தும், அழித்தும் அவனே திரு விளையாடல் நடத்துகிறான். அத்தகைய பெருமைமிக்க அவன் புகழைப் பாடி, வளையல்கள் ஒலிக்க, நீண்ட மேகலைகள் ஆரவாரிக்க, அழகிய கூந்தலின் மீது வண்டுகள் இசைபாட, பூக்கள் நிறைந்த பொய்கையில் நீராடி இறைவனின் பொற்பாதங்களைப் போற்றுவோம்.
Next Story