7. திருப்பாவை - திருவெம்பாவை
7. திருப்பாவை - திருவெம்பாவை கீசு கீசு என்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசைபடுத்த தயிர் அரவம்
திருப்பாவை
கீசு கீசு என்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைபடுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாரா யணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?
நேசம் உடையாய் திறவேலோர் எம்பாவாய்.
பெண்களுக்கெல்லாம் தலைமையாய் இருப்பவளே! பொழுதுவிடிந்தது காண்பாயாக. ஆனைச்சந்தன் என்னும் குருவிகள் தங்கள் துணையுடன் பேசும் குரலும், அவை கீச்சிடும் ஒலிகளும் உன் காதில் விழவில்லையா? வாசனை மிக்க கூந்தலை உடைய ஆயர்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிரினைக் கடையும் ஓசையும், அப்பொழுது அவர்கள் அணிந்துள்ள பொன்னால் செய்யப்பட்ட காசுமாலையும், மங்களத் தாலியும் ஒன்றோடு ஒன்று மோதுவதால் ஏற்படுகின்ற ஓசையும் உனக்குக் கேட்கவில்லையா? இறைவன் நாராயணனை நாங்கள் புகழ்ந்து பாடுதலைக் கேட்டுக் கொண்டு, பேய் போல் உறங்குகின்ற பெண்ணே! உடனே எழுந்து வந்து கதவைத் திற, கண்ணனை வணங்கப் புறப்படுவோம்.
திருவெம்பாவை
அன்னே யிவையுஞ் சிலவோ பலஅமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை யென்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்
தாயே! உன் விளையாட்டுகளில் இவையும் சிலவோ? தேவர் பலராலும் நினைக்க முடியாத, ஒப்பில்லாத சிறப்பு டைய இறைவனின் அடையாளங்களாகிய சங்கு போன்றவற்றின் ஓசையைக் கேட்ட வுடன் ‘சிவனே’ என்று வாய் திறந்து கூறுவாய் ‘தென்னவனே’ எனக் கூறி முடிக்கும் முன் நெருப்பிலிட்ட மெழுகாய் உருகி நிற்பாய். ஆனால் இப்பொழுது என்ன செய்கிறாய்? ‘தலைவன்’ என்றும், ‘அரசன்’ என்றும், ‘இனியவன்’ என்றும் நாங்கள் தனித்தும், சேர்த்தும் பாடுகின்றோம். இன்னும் நீ உறங்குகின்றாயே? அடடா! இதுதான் உறக்கத்தின் சிறப்போ?
கீசு கீசு என்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைபடுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாரா யணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?
நேசம் உடையாய் திறவேலோர் எம்பாவாய்.
பெண்களுக்கெல்லாம் தலைமையாய் இருப்பவளே! பொழுதுவிடிந்தது காண்பாயாக. ஆனைச்சந்தன் என்னும் குருவிகள் தங்கள் துணையுடன் பேசும் குரலும், அவை கீச்சிடும் ஒலிகளும் உன் காதில் விழவில்லையா? வாசனை மிக்க கூந்தலை உடைய ஆயர்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிரினைக் கடையும் ஓசையும், அப்பொழுது அவர்கள் அணிந்துள்ள பொன்னால் செய்யப்பட்ட காசுமாலையும், மங்களத் தாலியும் ஒன்றோடு ஒன்று மோதுவதால் ஏற்படுகின்ற ஓசையும் உனக்குக் கேட்கவில்லையா? இறைவன் நாராயணனை நாங்கள் புகழ்ந்து பாடுதலைக் கேட்டுக் கொண்டு, பேய் போல் உறங்குகின்ற பெண்ணே! உடனே எழுந்து வந்து கதவைத் திற, கண்ணனை வணங்கப் புறப்படுவோம்.
திருவெம்பாவை
அன்னே யிவையுஞ் சிலவோ பலஅமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை யென்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்
தாயே! உன் விளையாட்டுகளில் இவையும் சிலவோ? தேவர் பலராலும் நினைக்க முடியாத, ஒப்பில்லாத சிறப்பு டைய இறைவனின் அடையாளங்களாகிய சங்கு போன்றவற்றின் ஓசையைக் கேட்ட வுடன் ‘சிவனே’ என்று வாய் திறந்து கூறுவாய் ‘தென்னவனே’ எனக் கூறி முடிக்கும் முன் நெருப்பிலிட்ட மெழுகாய் உருகி நிற்பாய். ஆனால் இப்பொழுது என்ன செய்கிறாய்? ‘தலைவன்’ என்றும், ‘அரசன்’ என்றும், ‘இனியவன்’ என்றும் நாங்கள் தனித்தும், சேர்த்தும் பாடுகின்றோம். இன்னும் நீ உறங்குகின்றாயே? அடடா! இதுதான் உறக்கத்தின் சிறப்போ?
Next Story