உள்ளம் மகிழும் வாழ்வமைய ஓரையைப்பாருங்கள்!
ஜாதகத்தில் 12 கட்டங்கள் உள்ளன. அந்தக் கட்டங்களில் இடம்பெற்ற கிரகங்கள் நல்ல விதத்தில் உலா வந்தால் நீங்கள் தீட்டிய திட்டங்கள் எல்லாம் உடனடியாக முடிவடையும். உலாவரும் கிரகநிலையில் ஓரளவு தாராபலம் குறைவாக இருந்தால் முன்னேற்றத்தில் முட்டுக்கட்டைகள் ஏற்படலாம். அந்த நேரத்தில் வண்ணமலர் மாலை
ஜாதகத்தில் 12 கட்டங்கள் உள்ளன. அந்தக் கட்டங்களில் இடம்பெற்ற கிரகங்கள் நல்ல விதத்தில் உலா வந்தால் நீங்கள் தீட்டிய திட்டங்கள் எல்லாம் உடனடியாக முடிவடையும். உலாவரும் கிரகநிலையில் ஓரளவு தாராபலம் குறைவாக இருந்தால் முன்னேற்றத்தில் முட்டுக்கட்டைகள் ஏற்படலாம். அந்த நேரத்தில் வண்ணமலர் மாலை சூட்டி, வஸ்திரங்கள் அணிவித்து பொன்னான பாடல் பாடி புதுவாழ்வு தரவேண்டிக் கண்ணான தெய்வத்தை கைகூப்பி வழிபட்டால் எந்நாளும் இன்பத்தை எதிர்கொள்ள முடியும்.
ஜோதிடம் என்பது மிகப்பெரிய கடல். ஜோதி இருக்குமிடம் அறிந்து சொல்வது தான் 'ஜோதிடம்' என்பார்கள். அதாவது நெறிமுறைப்படி அறிந்து நிகரில்லா தெய்வத்தை வழிபட்டு, அறிவுரை கூறும் ஆன்றோர்களின் நூல்களைப் படித்து வருபவர்களுக்கு வாழ்க்கை வளம்பெறுவதற்குச் சொல்வதுதான் ஜோதிடம். அதற்கு 'ஜாதகம்' என்றும் பெயர் வைத்துள்ளனர். புதுமுயற்சிகள் செய்யும் பொழுது சாதகமான நேரமா? என்பதை அறிந்து கொள்வதற்கு உதவும் கருவியாக அது இருப்பதால் ஜாதகம் என்றனர்.
அந்த அடிப்படையில் ஜோதிடக் கடலில் கிடைத்த முத்துக்கள் ஏராளமாக உள்ளன. உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள மச்சத்திற்குக் கூட பலன் சொல்லி இருக்கிறார்கள். அச்சமில்லாது வாழ, அருகில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்க, மிச்சம் வைக்கும் அளவிற்குப் பொருளாதார நிலை உயர, மிகச்சிறப்பாக திருமணப் பொருத்தங்கள் தேர்ந்தெடுக்க, வெற்றி தரும் தொழிலுக்குப் பெயர் சூட்ட, அத்தனைக்கும் வழிகாட்டுவது ஜோதிடம் தான்.
அவற்றில் ஒரு சிலவற்றை இப்பொழுது பார்ப்போம்.
புதிதாகத் தொழில் தொடங்கவும், செய்யும் செயல் களில் வெற்றி கிடைக்கவும், அதிகாரிகளால் அனுகூலமான தகவல் பெறவும், பெண் பார்க்கும் படலம் நல்லவிதமாக நடைபெறவும், பிரச்சினைகள் தீர வழிகாட்டுபவரைச் சந்தித்து கலந்துரையாட எந்த நேரத்தில் செல்ல வேண்டும் என்பதை அறிந்து கொள்ள ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள 'ஓரை சாஸ்திரம்' வழிகாட்டுகின்றது.
அதாவது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கிரகங்களின் ஆதிக்கம் மாறுபடுகின்றது என்பதை வலியுறுத்தித் தான் 'ஓரை' என்ற ஒன்றினைச் சொல்லி வைத்தனர்.
எடுத்துக்காட்டாக ஞாயிற்றுக்கிழமை என்று எடுத்துக் கொள்வோம். காலை 6 மணி முதல் 7 மணி வரை சூரிய ஓரை. இந்த நேரத்தில் சூரியனுடைய ஆதிபத்யம் நடப்பதாகச் சொல்வார்கள். அதன்பிறகு காலை 7மணி முதல் 8 மணி வரை சுக்ர ஓரை. அதாவது சுக்ரனுடைய ஆதிக்கம் பெற்றதாகச் சொல்வர். அதன்பிறகு காலை 8 மணி முதல் 9 மணி வரை புதன் ஓரை.
காலை 9 மணி முதல் 10 மணி வரை சந்திர ஓரை. அதன்பிறகு காலை 10 மணி முதல் 11 மணி வரை சனி ஓரை. அதன்பிறகு காலை 11 மணி முதல் 12 மணி வரை குரு ஓரை. அதன்பிறகு மதியம் 12 மணி முதல் 1 மணி வரை செவ்வாய் ஓரை.
மதியம் 1 மணி முதல் 2 மணி வரை சூரிய ஓரை. மதியம் 2 மணி முதல் 3 மணி வரை சுக்ர ஓரை. மாலை 3 மணி முதல் 4 மணி வரை புதன் ஓரை. அதன்பிறகு மாலை 4 மணி முதல் 5 மணி வரை சந்திர ஓரை. அதன்பிறகு மாலை 5 மணி முதல் 6 மணி வரை சனி ஓரை.
இரவு நேரமானால் இந்த ஓரையிலுள்ள கிரக ஆதிக்கம் மாறுபடும். மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை குரு ஓரை, செவ்வாய் ஓரை, சூரிய ஓரை, சுக்ர ஓரை, புதன் ஓரை, சந்திர ஓரை, சனி ஓரை, குரு ஓரை, செவ்வாய் ஓரை, சூரிய ஓரை, சுக்ர ஓரை, புதன் ஓரை என்று ஒருமணி நேரத்திற்கு ஒரு முறை இந்த வரிசையில் நடைபெறும்.
இந்த ஓரைகளில் குரு ஓரை, சுக்ர ஓரை, புதன் ஓரை, சந்திர ஓரை ஆகியவைகள் சுப நிகழ்ச்சிகளுக்கு உகந்ததாகக் கருதப்படுகின்றது. என்றாலும் ஒவ்வொரு ஓரை யிலும் நாம் எந்த முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் என்றும் சொல்லி வைத்திருக்கின்றார்கள். அனைத்திலும் குரு ஓரை மிகுந்த சிறப்புடையதாகக் கருதப்படுகின்றது. குறிப்பாக மங்கள நிகழ்ச்சிகள் நடத்துவது சம்பந்தமாகப் பேச, தொழில் தொடங்க, செல்வந்தர்கள் தயவை நாட, சிறப்பான பணிகளில் ஈடுபட இது உகந்த நேரமாகும்.
இங்ஙனம் நாம் ஓரை அறிந்து நடந்தால் உள்ளம் மகிழும் வாழ்வைப் பெற இயலும்.
ஜோதிடம் என்பது மிகப்பெரிய கடல். ஜோதி இருக்குமிடம் அறிந்து சொல்வது தான் 'ஜோதிடம்' என்பார்கள். அதாவது நெறிமுறைப்படி அறிந்து நிகரில்லா தெய்வத்தை வழிபட்டு, அறிவுரை கூறும் ஆன்றோர்களின் நூல்களைப் படித்து வருபவர்களுக்கு வாழ்க்கை வளம்பெறுவதற்குச் சொல்வதுதான் ஜோதிடம். அதற்கு 'ஜாதகம்' என்றும் பெயர் வைத்துள்ளனர். புதுமுயற்சிகள் செய்யும் பொழுது சாதகமான நேரமா? என்பதை அறிந்து கொள்வதற்கு உதவும் கருவியாக அது இருப்பதால் ஜாதகம் என்றனர்.
அந்த அடிப்படையில் ஜோதிடக் கடலில் கிடைத்த முத்துக்கள் ஏராளமாக உள்ளன. உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள மச்சத்திற்குக் கூட பலன் சொல்லி இருக்கிறார்கள். அச்சமில்லாது வாழ, அருகில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்க, மிச்சம் வைக்கும் அளவிற்குப் பொருளாதார நிலை உயர, மிகச்சிறப்பாக திருமணப் பொருத்தங்கள் தேர்ந்தெடுக்க, வெற்றி தரும் தொழிலுக்குப் பெயர் சூட்ட, அத்தனைக்கும் வழிகாட்டுவது ஜோதிடம் தான்.
அவற்றில் ஒரு சிலவற்றை இப்பொழுது பார்ப்போம்.
புதிதாகத் தொழில் தொடங்கவும், செய்யும் செயல் களில் வெற்றி கிடைக்கவும், அதிகாரிகளால் அனுகூலமான தகவல் பெறவும், பெண் பார்க்கும் படலம் நல்லவிதமாக நடைபெறவும், பிரச்சினைகள் தீர வழிகாட்டுபவரைச் சந்தித்து கலந்துரையாட எந்த நேரத்தில் செல்ல வேண்டும் என்பதை அறிந்து கொள்ள ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள 'ஓரை சாஸ்திரம்' வழிகாட்டுகின்றது.
அதாவது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கிரகங்களின் ஆதிக்கம் மாறுபடுகின்றது என்பதை வலியுறுத்தித் தான் 'ஓரை' என்ற ஒன்றினைச் சொல்லி வைத்தனர்.
எடுத்துக்காட்டாக ஞாயிற்றுக்கிழமை என்று எடுத்துக் கொள்வோம். காலை 6 மணி முதல் 7 மணி வரை சூரிய ஓரை. இந்த நேரத்தில் சூரியனுடைய ஆதிபத்யம் நடப்பதாகச் சொல்வார்கள். அதன்பிறகு காலை 7மணி முதல் 8 மணி வரை சுக்ர ஓரை. அதாவது சுக்ரனுடைய ஆதிக்கம் பெற்றதாகச் சொல்வர். அதன்பிறகு காலை 8 மணி முதல் 9 மணி வரை புதன் ஓரை.
காலை 9 மணி முதல் 10 மணி வரை சந்திர ஓரை. அதன்பிறகு காலை 10 மணி முதல் 11 மணி வரை சனி ஓரை. அதன்பிறகு காலை 11 மணி முதல் 12 மணி வரை குரு ஓரை. அதன்பிறகு மதியம் 12 மணி முதல் 1 மணி வரை செவ்வாய் ஓரை.
மதியம் 1 மணி முதல் 2 மணி வரை சூரிய ஓரை. மதியம் 2 மணி முதல் 3 மணி வரை சுக்ர ஓரை. மாலை 3 மணி முதல் 4 மணி வரை புதன் ஓரை. அதன்பிறகு மாலை 4 மணி முதல் 5 மணி வரை சந்திர ஓரை. அதன்பிறகு மாலை 5 மணி முதல் 6 மணி வரை சனி ஓரை.
இரவு நேரமானால் இந்த ஓரையிலுள்ள கிரக ஆதிக்கம் மாறுபடும். மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை குரு ஓரை, செவ்வாய் ஓரை, சூரிய ஓரை, சுக்ர ஓரை, புதன் ஓரை, சந்திர ஓரை, சனி ஓரை, குரு ஓரை, செவ்வாய் ஓரை, சூரிய ஓரை, சுக்ர ஓரை, புதன் ஓரை என்று ஒருமணி நேரத்திற்கு ஒரு முறை இந்த வரிசையில் நடைபெறும்.
இந்த ஓரைகளில் குரு ஓரை, சுக்ர ஓரை, புதன் ஓரை, சந்திர ஓரை ஆகியவைகள் சுப நிகழ்ச்சிகளுக்கு உகந்ததாகக் கருதப்படுகின்றது. என்றாலும் ஒவ்வொரு ஓரை யிலும் நாம் எந்த முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் என்றும் சொல்லி வைத்திருக்கின்றார்கள். அனைத்திலும் குரு ஓரை மிகுந்த சிறப்புடையதாகக் கருதப்படுகின்றது. குறிப்பாக மங்கள நிகழ்ச்சிகள் நடத்துவது சம்பந்தமாகப் பேச, தொழில் தொடங்க, செல்வந்தர்கள் தயவை நாட, சிறப்பான பணிகளில் ஈடுபட இது உகந்த நேரமாகும்.
இங்ஙனம் நாம் ஓரை அறிந்து நடந்தால் உள்ளம் மகிழும் வாழ்வைப் பெற இயலும்.
Next Story