நேபாள நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 112- ஆக உயர்வு


நேபாள நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 112- ஆக உயர்வு
x

நேபாளத்தில் கனமழையை தொடர்ந்து பயங்கர நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 112-ஆக உயர்ந்துள்ளது.

காத்மாண்டு,

அண்டை நாடான நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனை தொடர்ந்து தலைநகர் காத்மாண்டுவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 112-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருப்பதால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அங்கு நிலச்சரிவு காரணமாக நாடு முழுவதும் 44 நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன. அதேபோல் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் அங்கு மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.


Next Story