திருப்பத்தூரில் பெண்கள் விடுதி அறைக்குள் எட்டிப்பார்த்த இளைஞர் கைது


திருப்பத்தூரில் பெண்கள் விடுதி அறைக்குள் எட்டிப்பார்த்த இளைஞர் கைது
x

திருப்பத்தூரில் ஜன்னல் வழியாக பெண்கள் விடுதி அறைக்குள் எட்டிப்பார்த்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூரில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் விடுதியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், விடுதி அருகே கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் பெட்ரிக் என்ற இளைஞர், விடுதியின் ஜன்னல் வழியாக மாணவிகள் அறையை எட்டிப்பார்த்ததாக கூறப்படுகிறது.

இதனைக் கண்டு அலறி கூச்சலிட்ட மாணவிகள், இதுகுறித்து உடனடியாக விடுதி காப்பாளரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விடுதி காப்பாளர் அளித்த புகாரின்பேரில் பெட்ரிக்கை கைது செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



Next Story