தி.மு.க.வை யார் அழிக்க நினைத்தாலும் காணாமல் போவார்கள்- கே.என்.நேரு


தி.மு.க.வை யார் அழிக்க நினைத்தாலும் காணாமல் போவார்கள்-  கே.என்.நேரு
x

மதுரையில் தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மதுரை,

மதுரையில் தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவிலேயே சிறந்த முதல்-அமைச்சராக திகழ்ந்து வருகிறார். மகளிர் உரிமை தொகை, பேருந்தில் இலவச பயணம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வசதி என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை நமக்கு தர மறுக்கிறார்கள். அப்படி இருந்தும் சிறப்பான நிதி நிலை அறிக்கையை முதல்-அமைச்சர் கொடுத்துள்ளார்.

தமிழகத்திற்கு பிரதமர் மோடி மாதந்தோறும் வருகிறார். தேர்தலுக்கு பின் தி.மு.க. இருக்காது என மோடி கூறி உள்ளார். மோடி மட்டுமல்ல, தி.மு. க.வை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போய் உள்ளார்கள். மதுரை புறநகர் தொகுதியான திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதிகள் விருதுநகர் நாடாளுமன்றத்திலும் சோழவந்தான், உசிலம் பட்டி உள்ளிட்ட தொகுதிகள் தேனி தொகுதியிலும் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம் என்றார்.

1 More update

Next Story