வார விடுமுறை: தமிழகம் முழுவதும் 950 சிறப்பு பஸ்கள் இயக்கம்


வார விடுமுறை: தமிழகம் முழுவதும் 950 சிறப்பு பஸ்கள் இயக்கம்
x

வார விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதும் 950 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை,

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வருகிற 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை), 13-ந் தேதி (சனிக்கிழமை), 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 265 பஸ்களும், 13-ந் தேதி (சனிக்கிழமை) 325 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 12-ந் தேதி வெள்ளிக்கிழமை 65 பஸ்களும் 13-ந் தேதி சனிக்கிழமை 65 பஸ்களும் மேற்கூறிய இடங்களில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

மேலும், வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) 15 பஸ்களும், 13-ந் தேதி (சனிக்கிழமை) 15 பஸ்களும் என 30 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story