வயநாடு நிலச்சரிவு; இந்தியக் கம்யூனிஸ்ட் தமிழ்நாடு மாநில செயற்குழு ரூ.10 லட்சம் நிதியுதவி


வயநாடு நிலச்சரிவு; இந்தியக் கம்யூனிஸ்ட் தமிழ்நாடு மாநில செயற்குழு ரூ.10 லட்சம் நிதியுதவி
x

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் தமிழ்நாடு மாநில செயற்குழு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது.

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"வரலாறு காணாத பெரும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு பகுதியில் வாழும் நமது கேரள சகோதரர்களின் துன்பத்தில் உதவும் பொருட்டு, கேரளா முதல்-மந்திரியின் பேரிடர் நிவாரண நிதிக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுவின் சார்பில், ரூபாய் 10 லட்சம் அனுப்பப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கிறோம்.

மேலும் அனைத்தையும் இழந்து தவிக்கும் அந்த மக்களுக்கு, தமிழ்நாட்டில் இருந்து நிவாரண பொருட்களை திரட்டி, கட்சியின் கேரள மாநிலக் குழுவின் துணையோடு அனுப்ப இருக்கிறோம்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story