விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவு செய்வோம் - அன்புமணி ராமதாஸ்


விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவு செய்வோம் - அன்புமணி ராமதாஸ்
x

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவு செய்வோம் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி மரணம் அடைந்தார். இந்த நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்கி 21-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிர்வாகிகள் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசி முடிவு செய்து, பின்னர் அது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவோம் என்று தெரிவித்தார்.



Next Story