கம்பம் அருகே முல்லைப்பெரியாற்றில் ஆண் பிணம்


கம்பம் அருகே முல்லைப்பெரியாற்றில் ஆண் பிணம்
x

கம்பம் அருகே முல்லைப்பெரியாற்றில் ஆண் பிணம் கிடந்தது.

தேனி

கம்பம் அருகே சுருளிப்பட்டியில் உள்ள தொட்டன்மன்துறை முல்லைப்பெரியாறு தடுப்பணை பகுதியில் ஆண் பிணம் மிதப்பதாக கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் மற்றும் கம்பம் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, ஆற்றில் மிதந்த ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் சுருளிப்பட்டியை சேர்ந்த சரவணன் (வயது 38) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரவணன் ஆற்றில் குறித்து தற்கொலை செய்துகொண்டாரா? ஆற்றில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story