அரியலூரில் லாரி - கார் மோதி விபத்து: 4 பேர் பலி

நின்றுகொண்டிருந்த லாரியின் பின்னால் கார் பயங்கரமாக மோதியது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி அருகே அரியலூர் -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஜல்லிக்கற்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.
அப்போது வேகமாக வந்த கார் ஒன்று நின்றுகொண்டிருந்த லாரியின் பின்னால் பயங்கரமாக மோதியது. இன்று மாலை நடந்த இந்த விபத்தில், காரில் பயணம் செய்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். விபத்தி்ல் பலியான நான்கு பேரும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





