தண்டவாள பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம்


தண்டவாள பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம்
x

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட திண்டுக்கல்-திருச்சி ரெயில் பாதையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே, பூங்குடி-திருச்சி ரெயில் பாதையில் உள்ள தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஈரோட்டில் இருந்து மதுரை வழியாக செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16845) 9-ந் தேதி, 12-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை, 16-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை, 23-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும்.

மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.16846) இன்று (செவ்வாய்க்கிழமை), 10-ந் தேதி, 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை, 17-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை, 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு ஈரோடு புறப்பட்டு செல்லும்.

அதேபோல, செங்கோட்டையில் இருந்து மதுரை வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16848) இன்று, 10-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை, 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் மயிலாடுதுறை செல்லும்.

நவராத்திரி பண்டிகை விடுமுறையை தொடர்ந்து பயணிகளின் வசதிக்காக, வருகிற 11-ந் தேதி, 12-ந் தேதி மற்றும் 16-ந் தேதி ஆகிய 3 நாட்கள் மட்டும் இந்த ரெயில் விருதுநகரில் இருந்து மதுரை, திண்டுக்கல் வழியாக திருச்சி செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story