பூம்புகார் கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

காணும் பொங்கலையொட்டி பூம்புகார் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
பூம்புகார் கடற்கரைக்கு காலை முதலே ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் கடலில் குளித்து மகிழ்ந்தனர். முன்பு சுற்றுலா பயணிகள் கடற்கரையில் உள்ள சிலப்பதிகார கலைக்கூடத்தை பார்வையிட்டு செல்வது வழக்கம்.
ஆனால் தற்போது சிலப்பதிகார கலைக்கூடம் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் நேற்று பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





