அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை மறுநாள் கடைசி நாள்


அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை மறுநாள் கடைசி நாள்
x

அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர் சேர்க்கை கடந்த 6-ந்தேதி தொடங்கியது

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை , அறிவியல் கல்லூரிகளில் 1.07 லட்சம் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கானமாணவர் சேர்க்கை கடந்த 6-ந்தேதி தொடங்கியது.உயர்கல்வியை தொடர விரும்பும் ஏழை, எளிய மாணவர்கள் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆர்வமாக விண்ணப் பித்து வருகின்றனர்.இதுவரை விண்ணப்ப பதிவு 2 லட்சத்தை கடந்து உள்ளது.

இந்த நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கடைசி நாளாகும். . விண்ணப்பிக்க 2 நாட்கள் இருப்பதால் இன்றும் நாளையும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு அடுத்த மாதம் 6-ந்தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதுபோல் அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் விண்ணப்பிக்க அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது


Next Story