தேனி, ராசிங்காபுரம் பகுதிகளில்நாளை மின்சாரம் நிறுத்தம்


தேனி, ராசிங்காபுரம் பகுதிகளில்நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 22 Aug 2023 12:15 AM IST (Updated: 22 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனி, ராசிங்காபுரம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

தேனி

தேனி மற்றும் ராசிங்காபுரம் துணை மின் நிலையங்களில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி, தேனி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, கோடாங்கிபட்டி, முத்துதேவன்பட்டி, அரண்மனைபுதூர், பூதிப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

ராசிங்காபுரம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட ராசிங்காபுரம், சிலமலை, டி.ஆர்.புரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பொட்டிப்புரம், சில்லமரத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை தேனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்தார்.

1 More update

Related Tags :
Next Story