பரமத்திவேலூரில் நடந்து சென்ற முதியவர் மயங்கி விழுந்து சாவு

பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள எம்.ஜி.ஆர்.சிலை பகுதியில் நேற்று மதியம் 70 வயதுடைய முதியவர் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அவர் சாலையில் திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன்பேரில் அங்கு வந்த போலீசார் முதியவரின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த முதியவர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து பரமத்திவேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





