விஷம் குடித்து முதியவர் சாவு

மோகனூர் அருகே விஷம் குடித்து முதியவர் இறந்தார்.
மோகனூர்
திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா காட்டுப்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிவகாமி (வயது 57). இவரது கணவர் பெரியண்ணன் (61). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. கடந்த 4-ந் தேதி மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பெரியண்ணன் கோபித்துகொண்டு மோகனூா் அருகே குன்னிபாளையத்தில் உள்ள தன் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவரது மனைவிக்கு போன் செய்து நான் விஷம் குடித்துவிட்டேன் என கூறினார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிவகாமி அங்கு சென்றார். அப்போது மயங்கி கிடந்த பெரியண்ணனை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பெரியண்ணன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






